பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

கரோனாவுக்கு 22 பொறியாளர்கள் பலி, 500 பேர் பாதிப்பு: பிகார் சங்கம்

கரோனா வைரஸின் இரண்டாவது அலை முன்னணி வீரர்கள் மட்டுமல்லாது,  பல முக்கிய அரசு அதிகாரிகளும் பலியாகி வருகின்றனர். 

News image
Updated On :10 மே 2021, 5:58 am

கரோனா வைரஸின் இரண்டாவது அலை முன்னணி வீரர்கள் மட்டுமல்லாது,  பல முக்கிய அரசு அதிகாரிகளும் பலியாகி வருகின்றனர். 

இந்நிலையில், பிகார் பொறியியல் சேவை சங்கத்தில்(பிஇஎஸ்எ) பல்வேறு துறைகளில் உள்ள 22 பொறியாளர்கள் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 500-க்கும் மேற்பட்டவர்கள் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக பிகார் பொறியியல் சேவை சங்கத்தில் பொதுச் செயலாளர் டாக்டர் சுனில் குமார் சவுத்ரி கூறுகையில், 

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீட்டுத்தனிமையில் மற்றும்  மருத்துவமனைகளில் தங்கள் உயிருக்குப் போராடி வருகின்றனர். 

அறிக்கையின்படி, சாலை கட்டுமானத் துறையில் மூன்று பொறியாளர்கள், நீர்வளத் துறையைச் சேர்ந்த நான்கு பேர், மைக்ரோ நீர்வளத் துறையைச்  சேர்ந்த ஒருவர், கட்டட கட்டுமானத் துறையைச் சேர்ந்த இருவர், பொதுச்  சுகாதார பொறியியல் துறையைச் சேர்ந்த ஒருவர், ஊரக வளர்ச்சித்  துறையைச் சேர்ந்த ஒருவர், மற்ற துறைகளைச் சேர்ந்த மேலும் 10  பொறியியலாளர்கள் கரோனாவின் இரண்டாவது அலைகளில் தனது  வாழ்க்கையை இழந்துள்ளனர். 

பிகாரில் பொறியாளர்களின் இறப்பு தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இருந்தாலும், பல துறைகள் பொறியியலாளர்களை பணியில் இருக்கும்படி  கட்டாயப்படுத்துகின்றன. பொது முடக்கத்தால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன, ஆனால் தற்போது பல்வேறு திட்டங்களின் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. 

இதனால், பொறியாளர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பிகாரில் நிதீஷ் குமார் அரசின் மீது மிகுந்த அதிருப்தியில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.