/

திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே தீ விபத்து: 7 கடைகள் எரிந்து நாசம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே இருக்கும் ஆஸ்தான மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

News image

திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே தீ விபத்து

Updated On :4 மே 2021, 6:06 am

திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே இருக்கும் ஆஸ்தான மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

திருமலையில் உள்ள பேடி ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்கு அருகில் கிட்டத்தட்ட 150 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலை 6.45 மணியளவில் கடைகளுக்கு அருகே செல்லும் மின்வையரில் மின் கசிவு ஏற்பட்ட நிலையில், அங்குள்ள 7 கடைகளுக்கு தீ மளமளவெனப் பரவியது. 

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்து நடைபெற்ற நேரத்தில் கடைகளில் யாரும் இல்லாததால், ‘உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. 

மேலும், அப்பகுதியில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.