மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

மகாராஷ்டிரம்: ரசாயன தொழிற்சாலையில் வெடிவிபத்து; 4 பேர் பலி

மகாராஷ்டிரத்தின், ரத்னகிரி மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலையில் இன்று காலை அடுத்தடுத்து வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. 

News image

மகாராஷ்டிரம் ரசாயன தொழிற்சாலையில் வெடிவிபத்து: 4 பேர் பலி

Updated On :20 மார்ச் 2021, 9:33 am

மகாராஷ்டிரத்தின், ரத்னகிரி மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலையில் இன்று காலை அடுத்தடுத்து வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. 

கெத் தாலுகாவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் உள்ள ஒரு அலகுகளில் இன்று காலை 9 மணியளவில் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. 

வெடி விபத்தைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சுமார் 40-க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த சம்பவத்தில் காயமடைந்த தொழிலாளர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நான்கு பேர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

பலத்த காயம் அடைந்த மற்றொரு தொழிலாளி சிகிச்சை பெற்று வருவதாக ரத்னகிரியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி கூறினார்.

முதற்கட்ட விசாரணையில், தொழிற்சாலையில் உள்ள ஒரு கொதிகலனில் அதிக வெப்பம் ஏற்பட்டதன் காரணமாக வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.