தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

உயிரோடு இருக்க அல்ல.. உயிரோடு இருப்பதை நிரூபிக்க போராடியவரின் கதை

லால் பிஹாரி மிருதக்.. இவர் தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க நடத்திய சட்டப் போராட்டம் அப்போது நாளிதழ்களில் முக்கியச் செய்தியானது. அவர் பற்றிய தகவல் மீண்டும் செய்தியாகியுள்ளது.

News image
உயிரோடு இருக்க அல்ல.. உயிரோடு இருப்பதை நிரூபிக்க போராடியவரின் கதை
Updated On :28 ஜனவரி 2024, 3:32 am

IANS


அஸம்கார்: லால் பிஹாரி மிருதக்.. இவர் தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க நடத்திய சட்டப் போராட்டம் அப்போது நாளிதழ்களில் முக்கியச் செய்தியானது. அவர் பற்றிய தகவல் மீண்டும் செய்தியாகியுள்ளது.

அரசின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் இறந்தவர் என்று கூறப்பட்ட லால் பிஹாரி ம்ரிதக், பெரும் சட்டப் போராட்டத்துக்குப் பின் கடந்த 1994-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி உயிரோடு இருப்பதை நிரூபித்தார். அவருக்கு தற்போது 66 வயதாகிறது.

சரியாக 27 ஆண்டுகளுக்கு முன்பு தான் உயிரோடு இருப்பதை நிரூபித்த லால் பிஹாரி, மீண்டும் பிறந்ததாக அறிவிக்கப்பட்டு 27 ஆண்டுகள் ஆவதால், தற்போது தனது 56 வயது மனைவி கர்மி தேவியை மீண்டும் கரம்பிடிக்க திட்டமிட்டுள்ளார்.

அரசின் பதிவுகள்படி, நான் மீண்டும் பிறந்து 27 ஆண்டுகள் ஆகின்றன. எனது திருமண வைபவம் 2022ஆம் ஆண்டு, அதாவது அரசுப் பதிவின்படி எனக்கு 28 வயது ஆகும் போது நடைபெற உள்ளது என்று கூறியுள்ளார்.

லால் பிஹாரிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.  மக்களுக்கு எனது கதையை நினைவூட்டவே, மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறுகிறார்.

நான் போராடி எனது வழக்கில் வென்றபோதும், இந்த பதிவுகள் முறையில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லைடி. கடந்த 18 ஆண்டுகளாக நான் இறந்தவனாகவே, அரசின் பதிவுகளில் இருந்திருக்கிறேன். இன்னும் என்னைப் போல எத்தனையோ பேர் இறந்தவர்களாகவே இருக்கிறார்கள், அவர்களது நிலங்களை அரசு அதிகாரிகளின் உதவியோடு, உறவினர்கள் பங்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்று பாதிக்கப்பட்ட நபர்களுக்காக நான் உதவி செய்து வருகிறேன், இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன் என்கிறார்.

அஸம்கார் மாவட்டத்தில் வசித்து வரும் லால் பிஹாரி கடந்த 1975ஆம் ஆண்டு இறந்துவிட்டதாக பதிவு செய்யப்பட்டுவிட்டது. இதனை எதிர்த்து அவர் நடத்திய சட்டப்போராட்டத்தின்போது அவர் தனது பெயருடன் இறந்தவர் என்பதைக் குறிக்கும் ம்ரிதக் என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டார்.

இவரைப் பற்றி காகிதம் என்ற பெயரில் திரைப்படமும் வெளியாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.