/

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராகிறார் மல்லிகார்ஜுன கார்கே

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத்தின் பதவிக் காலம் நிறைவு பெறுவதை முன்னிட்டு,

News image

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராகிறார் மல்லிகார்ஜுன கார்கே

Updated On :12 பிப்ரவரி 2021, 5:36 am


புது தில்லி: மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத்தின் பதவிக் காலம் நிறைவு பெறுவதை முன்னிட்டு, அப்பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கே நியமிக்கப்படலாம் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில், மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடுவுக்கு கடிதம் எழுதப்பட்டிருப்பதாகவும், அதில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கேவை நியமிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மாநிலங்களகை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் குலாம் நபி ஆசாத்தின் பதவிக் காலம் பிப்ரவரி 15-ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதால், அந்தப் பதவியிடம் காலியாகிறது.

குலாம் நபி ஆசாத், ஜம்மு - காஷ்மீரிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர். கர்நாடகத்தைச் சேர்ந்த தலித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.