முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

செப். 25-இல் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு: விவசாயிகள் சங்கம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் சங்கத்தினர் செப்டம்பர் 25-இல் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :28 ஜனவரி 2024, 4:00 am

ANI

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் சங்கத்தினர் செப்டம்பர் 25-இல் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

தில்லியில் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 9 மாதங்களாக ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு விதமான போராட்டத்தை முன்னெடுத்து வரும் போராட்டக் குழுவினர் வருகின்ற செப்டம்பர் 25ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

முன்னதாக, மத்திய அரசுடன் விவசாயிகள் சங்கத்தினர் நடத்திய 12 கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.