நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

ஆப்கனிலிருந்து இந்தியா வந்தவர்களில் 2 பேருக்கு கரோனா

ஆப்கானிஸ்தானிலிருந்து நேற்று இந்தியா வந்தவர்களில் 2 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :28 ஜனவரி 2024, 3:58 am

ANI

ஆப்கானிஸ்தானிலிருந்து நேற்று இந்தியா வந்தவர்களில் 2 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததையடுத்து, அங்கிருந்து இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், இரண்டு ஆப்கன் எம்.பி.க்கள் உள்பட 392 பேர் 3 விமானங்களில் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். மேலும், தோஹாவில் தங்கவைக்கப்பட்டிருந்த மேலும் 146 இந்தியர்கள் மற்றொரு விமானத்தில் இந்தியாவுக்கு வந்தடைந்தனர்.

இவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தோஹாவிலிருந்து வந்த 2 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.