பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

ஆப்கனில் இந்திய தூதரகம் மூடல்: இந்தியர்கள் வெளியேற ‘இ-விசா’ அறிமுகம்

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டதையடுத்து, இந்தியர்கள் வெளியேற ‘இ-விசா’வை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

News image

ஆப்கனிலிருந்து வெளியேற காபூல் விமான நிலையத்தில் குவிந்த மக்கள்

Updated On :18 ஆகஸ்ட் 2021, 7:36 am

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டதையடுத்து, இந்தியர்கள் வெளியேற ‘இ-விசா’வை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க படையினர் நாடு திரும்பி வரும் நிலையில், ஆப்கனை படிப்படியாக கைப்பற்றி வந்த தலிபான்கள் ஞாயிற்றுக்கிழமை தலைநகரை கைப்பற்றி ஆட்சியை பிடித்தனர்.

இந்நிலையில், ஆப்கனில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்குள்ள இந்திய தூதரகம் மூடப்படுவதாக அறிவித்துள்ள மத்திய அரசு, தூதரக அதிகாரிகளை உடனடியாக தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்தது. இதையடுத்து, இந்திய விமானப் படையின் விமானம் மூலம் இன்று காலை தூதரக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை பத்திரமாக மீட்டு காபூல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளனர். 

மேலும், ஆப்கன் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக அந்நாட்டு மக்கள் மற்றும் பிற நாட்டு மக்கள் பலர் காபூல் விமான நிலையத்தில் நேற்று முதல் குவிந்து வருவதால், இந்தியர்களை பத்திரமாக மீட்க காபூலில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுத் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்திய தூதரகம் மூடப்பட்டுள்ளதால், ஆப்கனிலிருக்கும் இந்தியர்கள் வேகமாக வெளியேறுவதற்காக விரைந்து அனுமதி அளிக்கும் வகையில் இ-விசா முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.