ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடுவது சாத்தியமில்லை: மத்திய அரசு விளக்கம்

வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி போடுவது என்பது சாத்தியமில்லாதது என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :21 ஏப்ரல் 2021, 12:45 pm


மும்பை: வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி போடுவது என்பது சாத்தியமில்லாதது என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நலன் வழக்கில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை தாக்கல் செய்த பதில் மனுவில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், படுக்கையில் இருக்கும் நோயாளிகள் அல்லது இருசக்கர நாற்காலியில் இருப்போருக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று கரோனா தடுப்பூசி போட உத்தரவிடக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், தடுப்பூசி மருந்துகள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டகங்களை வீடு வீடாக எடுத்துச் செல்வது, தடுப்பூசி மருந்துகளை நெடுந்தொலைவுக்கு எடுத்துச் செல்வது போன்றவை சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது உள்ளிட்ட பல காரணிகளை மத்திய அரசு பட்டியலிட்டு, வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி போடுவது சாத்தியமில்லை என்று பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.