ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

துண்டு காகிதத்தில் செல்லிடப்பேசி எண்: பாகிஸ்தான் புறா மீது வழக்குப் பதிவு?

பாகிஸ்தானிலிருந்து எல்லைத் தாண்டி வந்த புறாவின் உடலில் துண்டு காகிதத்தில் ஒரு செல்லிடப்பேசி எண் இருந்த சம்பவத்தில் புறா மீது வழக்குப் பதிவு செய்ய எல்லைப் பாதுகாப்புப் படை தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image

துண்டு காகிதத்தில் செல்லிடப்பேசி எண்: பாகிஸ்தான் புறா மீது வழக்குப் பதிவு?

Updated On :21 ஏப்ரல் 2021, 11:02 am


அமிருதசரஸ்: பாகிஸ்தானிலிருந்து எல்லைத் தாண்டி வந்த புறாவின் உடலில் துண்டு காகிதத்தில் ஒரு செல்லிடப்பேசி எண் இருந்த சம்பவத்தில் புறா மீது வழக்குப் பதிவு செய்ய எல்லைப் பாதுகாப்புப் படை தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புறா மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து சட்ட நிபுணர்களிடம் பஞ்சாப் காவல்துறை ஆலோசனைக் கேட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று, பாகிஸ்தானிலிருந்து பறந்து வந்த புறா ஒன்று, ரோராவாலா பகுதியில் பாதுகாப்புப் பணியிலிருந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் தோளில் வந்து அமர்ந்தது.

அந்த புறாவின் காலில் ஒரு சிறு துண்டு காகிதமும், அதில் ஒரு செல்லிடப்பேசி எண்ணும் இருந்தது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த புறா காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, புகாரும் அளிக்கப்பட்டது. அந்தப் புறா மீது வழக்குப் பதிவு செய்ய பிஎஸ்எஃப் வலியுறுத்தி வருகிறது.

புறா ஒரு பறவை என்பதால், அதற்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய முடியுமா என்பது குறித்து பஞ்சாப் காவல்துறை சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளது.

புறாவின் காலில் இருந்த காகிதத்தில் எழுதப்பட்டிருந்த செல்லிடப்பேசி எண் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கங்கார்ஹ் காவல்நிலையத்தில் அந்தப் புறா வைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.