நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

புதிய கல்விக் கொள்கைப்படி மும்மொழிக் கொள்கையே: மத்திய அரசு 

நாட்டில் புதிய கல்விக் கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

News image
புதிய கல்விக் கொள்கைப்படி மும்மொழிக் கொள்கையே: மத்திய அரசு
Updated On :27 ஜனவரி 2024, 5:22 pm

DIN


நாட்டில் புதிய கல்விக் கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

புதிய கல்விக் கொள்கை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர அனுமதி கேட்டு தமிழக அரசின் சார்பில் கோரிக்கை ஏதேனும் அனுப்பப்பட்டுள்ளதா? என்று நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சகம் இன்று பதிலளித்துள்ளது.

அந்த பதிலில், புதிய கல்விக் கொள்கையின்படி, நாட்டில் மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த மொழியும் மாணவர்களிடம் திணிக்கப்படாது, மூன்றாவது மொழி என்பதை அந்தந்த மாநிலங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பள்ளியில் மாணவர்கள் விரும்பும் மொழியைப் படிக்கலாம் என்றும் பதிலளிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டாலும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் என்று தமிழக அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால், தற்போது மத்திய அரசின் நிலைப்பாடு, மும்மொழிக் கொள்கை எதிர்ப்பாளர்களுக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோல, நீட் தேர்வு எழுதத் தயாராகி வந்த மாணவர்கள் எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டனர் என்று எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கு, தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் புள்ளி விவரம் எதுவும் இல்லை என்று மத்திய கல்வி அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.