பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஆந்திரம்: கனக துர்கா கோயில் தேரில் இருந்த 3 வெள்ளி சிங்கச் சிலைகள் மாயம்

ஆந்திர மாநிலம் இந்திரகீலர்தியில் உள்ள கனக துர்கா கோயிலின் தேரில் இருந்த மூன்று வெள்ளி சிங்கச் சிலைகள் மாயமாகியிருப்பது அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

ஆந்திரம்: கனக துர்கா கோயில் தேரில் இருந்த 3 வெள்ளி சிங்கச் சிலைகள் மாயம்

Updated On :16 செப்டம்பர் 2020, 9:18 am


விஜயவாடா: ஆந்திர மாநிலம் இந்திரகீலர்தியில் உள்ள கனக துர்கா கோயிலின் தேரில் இருந்த மூன்று வெள்ளி சிங்கச் சிலைகள் மாயமாகியிருப்பது அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, அந்தர்வேதி ஸ்ரீ லஷ்மி நரசிம்ம சுவாமி கோயில் தேர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது.

இது குறித்த விசாரணையின் போதுதான், கோயில்களில் இருக்கும் தேர்கள் பாதுகாப்பாக இருக்கிறதா, கோயில் சொத்துக்களை கணக்கெடுக்கும் பணி உள்ளிட்டவை நடைபெற்றது. அப்போதுதான் கனகதுர்கா கோயில் தேரில் இருந்த மூன்று வெள்ளி சிங்கச் சிலைகள் மாயமானது தெரிய வந்துள்ளது.

இந்த தேர் சிறப்பு விழாக்களின் போது மட்டுமே வெளியே எடுக்கப்படும். அதுவரை கோயிலின் வாயிலில் உள்ள மகாமண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். இந்த தேரின் நான்கு பக்கத்திலும் நான்கு வெள்ளி சிங்கச் சிலைகள் இருந்தன. அதில் மூன்று சிலைகள் மாயமாகியுள்ளன. ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது.

தேர் மகாமண்டபத்தில் வைக்கப்பட்டு, காவலாளியை நியமித்திருந்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, தேர் எரிந்தது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், தற்போது கோயில் தேரில் சிலைகள் திருடப்பட்டிருப்பது மற்றொரு புயலை கிளப்பியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.