தெலங்கானாவில் ஒரேநாளில் 1,983 பேர் கரோனாவிலிருந்து குணம்
தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,451 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், 1,983 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.


தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,451 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், 1,983 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதிதாக 1,451 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,20 லட்சமாக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 22,774 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 1,9 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒருநாளில் மட்டும் 1,983 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 9 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,265-ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கடந்த ஒரேநாளில் 42,497 சோதனைகள் செய்யப்பட்ட நிலையில், மாநிலத்தில் இதுவரை 37,08 லட்சம் பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...