திருப்பதி: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2 மாத காலத்துக்குப் பின் ஹைதராபாத்தில் இருந்து அமராவதியில் உள்ள தனது இல்லத்துக்குத் திரும்பினார்.
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த மார்ச் 20 ஆம் தேதி தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்திற்குச் சென்றார். அதற்குப்பின் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், அவர் அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டது. அதனால் அவர் கடந்த 2 மாதங்களாக ஐதராபாத்தில் உள்ள இல்லத்தில் தங்கியிருந்தார்.
தற்போது பொது முடக்கத்தில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால், அவர் தெலங்கானாவிலிருந்து ஆந்திரத்துக்கு வர இரு மாநிலங்களிடமும் விண்ணப்பித்து அனுமதி பெற்றார்.
அவர் திங்கள்கிழமை காலை ஐதராபாத்திலிருந்து புறப்பட்டு, சுமார் 2 மாத கால இடைவெளிக்குப் பின் அமராவதியில் உள்ள தனது இல்லத்துக்கு சந்திரபாபு நாயுடு வந்து சேர்ந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கென்னை நேரில் அழைத்துப் பாராட்டிய ரிஷப் ஷெட்டி!

நீட் தோ்வுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் பதற்றம் வேண்டாம்: என்டிஏ

கத்தரி வெய்யில்: என்ன செய்யலாம், எதைத் தவிர்க்கலாம்!
நம்பிக்கை இருந்தால் அதிசயம் நடக்கும்: சூர்யா
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


