மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ராஜஸ்தான், பிகார், உத்தரகண்ட், அசாம் மாநிலத்தில் கரோனா பாதிப்பு நிலவரம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டோர் விவரத்தை ராஜஸ்தான், பிகார், உத்தரகண்ட், அசாம் ஆகிய மாநிலங்களின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :23 மே 2020, 7:37 am

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டோர் விவரத்தை ராஜஸ்தான், பிகார், உத்தரகண்ட், அசாம் ஆகிய மாநிலங்களின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 

ராஜஸ்தான்

ராஜஸ்தானில் இன்று காலை 9 மணி நிலவரப்படி நேற்று ஒரே நாளில் புதிதாக 48 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,542-ஐ எட்டியுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தார்.

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் நாகூர் (17), கோட்டா (10), ஜுன்ஜுனு (6), ஜெய்ப்பூர் (5) மற்றும் ஜலவர் (4) ஆகிய இடங்களிலிருந்து அதிகபட்ச வழக்குகள் பதிவாகியுள்ளன. 

மேலும், ஒருவர் பலியாகியுள்ள நிலையில், இதுவரை ராஜஸ்தான் மாநிலத்தில் இறப்பு எண்ணிக்கை 155 ஆக உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

பிகார்

பிகார் மாநிலத்தில் 61 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,166 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கரோனா நோய்த் தொற்று பாதித்து 1,526 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். 629 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 58,905 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

அசாம்

அசாம் மாநிலத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று நோய் பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 266 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட 266 பேரில் 54 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். 205 பேர் சிகிச்சையில் உள்ளனர். நான்கு பேர் இதுவரை பலியாகியுள்ளனர். 

உத்தரகண்ட் 

உத்தரகண்ட்டில் மேலும் மூன்று பேருக்கு கரோனா பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 153 ஆகவும், 56 பேர் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  நோய்த் தொற்றுக்கு ஒருவர் பலியாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.