ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

வாட்ஸ் அப் மூலம் சிறுவர்களுக்கு போதைப்பொருள் விற்ற பெண் கைது

வாட்ஸ் அப் மூலம் சிறுவர்களுக்கு போதைப்பொருள் விற்ற பெண் தில்லியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :10 மே 2020, 11:43 am

புது தில்லி: வாட்ஸ் அப் மூலம் சிறுவர்களுக்கு போதைப்பொருள் விற்ற பெண் தில்லியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளதாவது:

தில்லியின் முகர்ஜி நகர் , ரஜோரி கார்டன் பகுதியைச் சேர்ந்த பெண் (வயது 45) ஒருவர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். இவர் பணம் படைத்தவர்களின் வீட்டு இளம்பருவ குழந்தைகளை சேர்த்து வாட்ஸ் அப் குழு ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதன்மூலம் அப்பெண் அவர்களுக்கு ஈ.சிகரெட் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருள்களை விற்பனை செய்துள்ளார். அதற்கான பணத்தினை பே டி எம் மூலம் பெற்றுக்கொள்ளும் அவர் பின்னர் பொருளை நேரடியாக வந்து  கொடுத்து விடுவார்.

இதுதொடர்பாக தகவல் கிடைத்தவுடன் சிறுவன் ஒருவனுக்கு போதைப்பொருளை அளிக்க வந்தவரை கையும் களவுமாக பிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளோம்.

அந்தப் பெண்ணின் கணவர் ஏற்றுமதி  இறக்குமதி தொழில் செய்துவருவதாகத் தெரிய வந்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது

இவ்வாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.