மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

பிரதமர் மோடியுடன் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று சந்திப்பு

நாடாளுமன்றத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சந்தித்துப் பேசுகிறார்.

News image
Updated On :3 மார்ச் 2020, 5:36 am


புது தில்லி: நாடாளுமன்றத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சந்தித்துப் பேசுகிறார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று 3வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு பிரதமர் மோடியை இன்று முதல் முறையாக சந்திக்கிறார் அரவிந்த் கேஜரிவால்.

வடகிழக்கு தில்லியில் வெடித்த வன்முறை குறித்து இரு தலைவர்களும் இந்த சந்திப்பின் போது பேசக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமரின் அறையில் இந்த சந்திப்பு 11 மணியளவில் நடைபெறுகிறது. முன்னதாக தில்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து தில்லி வன்முறை குறித்து பேசிய நிலையில், இன்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுடன் சந்திப்பு நிகழ்கிறது.

தில்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யும் பணியில் தில்லி அரசு ஈடுபட்டு வரும் நிலையில், இன்று பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.