மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

திருமணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பாக மணமகளைக் கொன்ற மணமகன்: காரணம் என்ன தெரியுமா?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பாக மணமகளை கழுத்தை நெரித்து மணமகன்  கொன்ற கொடூர சம்பவம் நிகழந்துள்ளது. 

News image

கோப்புப் படம்

Updated On :1 மார்ச் 2020, 10:57 am

ரே பரேலி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பாக மணமகளை கழுத்தை நெரித்து மணமகன்  கொன்ற கொடூர சம்பவம் நிகழந்துள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் ரே பரேலி மாவட்டம் குர்பக்ஸ்கஞ்ச் கிராமத்தைச் சேர்ந்தவர் சரிகா யாதவ் (20). செவிலியர் கல்லூரியில் பயின்று வரும் இவருக்கு, மன்டோஷ் யாதவ் (24) என்பவருடன் திருமணம் நிச்சயமாகி இருந்தது.  பதாய் பூர்வா கிராமத்தில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கி பயின்று வந்த சரிகா, திருமணத்திற்கு சில பொருட்கள் வாங்குவதற்காக கடந்த 26 ஆம் தேதி, மண்டோஷுடன் வெளியே சென்றுள்ளார். ஆனால் இரவு அவர் வீடு திரும்பவில்லை.    

மறுநாள் அவரது உடல் அந்த கிராமத்திற்கு வெளியே கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். சரிகாவுடன் கடைசியாக வெளியே சென்றவர் என்ற அடிப்படையில், மன்டோஷிடம் காவலர்கள் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் முடிவில் சரிகாவை ராதாபுர் பகுதியில் உள்ள ஆளில்லா வீடு ஒன்றிற்கு அழைத்துச் சென்று அவரை மயக்க மாத்திரை ஒன்றை விழுங்கச் செய்து, பின்னர் கழுத்தை நெறித்துக் கொலை செய்ததை,   மன்டோஷ் ஒப்புக் கொண்டார். பின்னர் தனது சகோதரரின் உதவியுடன் சரிகாவின் உடலை கிராமத்திற்கு வெளியே சென்று வீசி விட்டுவந்ததையும் அவர் ஒப்புக் கொண்டார்.

கல்லூரிக்கு சென்றுவர வசதியாக சரிகா ஸ்கூட்டி ஒன்றை வாங்கி கேட்டதால் தான் எரிச்சல் அடைந்ததாகவும், அத்துடன் சரிகாவிக்கு இந்னொருவருடன் தொடர்பு இருப்பதாக தான் சந்தேகித்ததாகவும் மன்டோஷ் இந்த  கொலைக்கு காரணங்களாக  கூறியுள்ளார்.

இதனால் மன்டோஷையும் அவரது சகோதரரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெறு வருகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.