பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மகாராஷ்டிரத்தில் ஜூன் 30-க்குப் பிறகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்: முதல்வர் சூசகம்

மகாராஷ்டிரத்தில் ஜூன் 30-க்குப் பிறகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

News image

மகாராஷ்டிரத்தில் ஜூன் 30-க்குப் பிறகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே சூசகமாகத் தெரிவித்துள்ளார் (கோப்புப்படம்)

Updated On :28 ஜூன் 2020, 10:47 am

மும்பை: மகாராஷ்டிரத்தில் ஜூன் 30-க்குப் பிறகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஞாயிறு மதியம் மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக அவர் ஆற்றிய உரையில் கூறியுள்ளதாவது:

மாநிலத்தில் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகள் எல்லாம் ஜூன் 30-ஆம் தேதியோடு முடிந்து விடும் என்று தோன்றவில்லை. மாநிலத்தில் கரோனா தொற்றின் தாக்கம் ஒரு பெரிய அச்சுறுத்தலாக நீடிக்கும்போது, நாம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கரோனா மட்டுமல்ல பருவகால தொற்றுநோய்களான மலேரியா மற்றும் டெங்கு ஆகியவற்றில் இருந்து நம்மைக் காத்துக் கொள்வதிலும் கவனமாக இருக்க வேண்டும். 

தொற்றின் பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் மீண்டும் தங்களது சேவையைத் துவக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் மும்பை மாநகர காவல்துறையும் ஊரடங்கு கட்டுபாடுகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டிய அவசியத்தினை வலியுறுத்தி சமூக வலைதளங்களில் பிரசாரங்களைத் துவக்கியுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.