பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கூட்டத்தின் கண்முன்னே விநோத விபத்தில் சிக்கி உயிரிழந்த யானைக்குட்டி!

தனது கூட்டத்தின் கண்முன்னே எதிர்பாரா விபத்தில் சிக்கி யானைக்குட்டி  ஒன்று உயிரிழந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது.

News image

உயிரிழந்த யானைக்குட்டி

Updated On :24 ஜூன் 2020, 11:04 am

கொல்கத்தா: தனது கூட்டத்தின் கண்முன்னே எதிர்பாரா விபத்தில் சிக்கி யானைக்குட்டி  ஒன்று உயிரிழந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது.

இதுதொடர்பாக மாநில வனத்துறையினர் சார்பில் கூறப்படுவதாவது:

மேற்கு வங்கத்தின் அலி புர்துவார் மாவட்டத்தில் ஜல்தபரா தேசிய வனப்பூங்கா அமைந்துள்ளது. சம்பவத்தன்று இந்த வனத்தின் வடக்குப் பகுதியில் இருந்து யானைக் கூட்டம் ஒன்று, கிழக்கு மதரிஹர் பகுதியில் உள்ள பாக்குத் தோட்டம் ஒன்றுக்குள் புகுந்துள்ளது.

அப்போது அங்கிருந்த மரக்கிளையொன்று எதிர்பாராவிதமாக சாய்ந்துள்ளது. அப்படி சாயும்போது அருகில் இருந்த மின்கம்பியையும் சேர்த்து இழுத்துள்ளது. அதேநேரத்தில் சரியாக அங்கு வந்த யானைக்குட்டி ஒன்றின் மீது அந்த மின்சாரக் கம்பி பட்டு மின்சாரம் தாக்கி குட்டி உயிரிழந்துள்ளது.  

யானைகளின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த கிராமத்தினர், அவற்றால் மேற்கொண்டு தங்களுக்கு எதுவும் ஆபத்து வராமல் இருக்க சத்தம் எழுப்பி அவற்றை விரட்டி விட்டு, உள்ளூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

ஜூன் 16-ஆம் தேதியிலிருந்து அந்தப்பகுதியில் யானைகள் பலியாவது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.