/

கரோனா பரிசோதனை 3 மடங்கு அதிகரிப்பு; நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர்:கேஜரிவால் 

கரோனா பாதித்து வீட்டிலேயே தனித்து வைக்கப்படுவோருக்கு அரசு சார்பில் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வழங்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

News image

கரோனா பாதித்து வீட்டிலேயே தனித்து வைக்கப்படுவோருக்கு தில்லி அரசு சார்பில் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்

Updated On :22 ஜூன் 2020, 10:35 am

புது தில்லி: கரோனா பாதித்து வீட்டிலேயே தனித்து வைக்கப்படுவோருக்கு அரசு சார்பில் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வழங்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜரிவால், கரோனா பாதித்து அறிகுறி இல்லாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவோர், அவ்வப்போது தங்களது உடல் ஏற்கும் ஆக்ஸிஜன் அளவைக் கணக்கிட வசதியாக அரசு சார்பில் நோயாளிகளுக்கு ஆக்ஸிமீட்டர் வழங்கப்படும். கரோனாவில் இருந்து மீண்ட பிறகு அதை அரசிடம் திரும்ப வழங்கிவிட வேண்டும்.

தற்போது தில்லியில் கரோனா பரிசோதனை மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை நாள் ஒன்றுக்கு ஐந்து ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. இது தற்போது நாள் ஒன்றுக்கு 18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி கரோனா பரிசோதனை செய்து கொள்ள வரும் பொதுமக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாது என்றும் கூறியுள்ளார்.

சீனாவுக்கு எதிராக இந்தியா இரண்டு போர்களை எதிர்கொண்டு வருகிறது. ஒன்று, எல்லையில், மற்றொன்று சீனாவின் கரோனா தொற்றுடன். இரண்டு போரையும் நாம் ஒற்றுமையோடு எதிர்கொள்ள வேண்டும். இதில் எந்த ஒரு விஷயத்திலும் அரசியல் செய்யக்கூடாது என்று அரவிந்த் கேஜரிவால் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.