/

கோவாவில் கரோனா தொற்றுக்கு முதல் பலி

கோவாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு முதல் நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

News image

Goa reports first COVID-19 death

Updated On :22 ஜூன் 2020, 6:21 am

கோவாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு முதல் நபர் உயிரிழந்துள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், 

வடக்கு கோவாவின் மோர்லெம் நகரைச் சேர்ந்த 85 வயது பெண் ஒருவர் மருத்துவமனையில் கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மூச்சுத்தினறல் காரணமாக அவர் சிகிச்சை பலனின்றி இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார். 

இந்த மாநிலத்தில் பதிவாகியுள்ள முதல் மரணம் இதுவாகும். அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். 

நாட்டின் மற்ற பகுதியை விட கோவாவில் கடுமையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த மாநிலத்தில் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதாகவும் ரானே கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.