பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

அயோத்தியில் ராமர் கோயில்: பூமி பூஜை திடீர் ஒத்திவைப்பு

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காகத் திட்டமிடப்பட்டிருந்த பூமி பூஜை திடீர் என்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :18 ஜூன் 2020, 12:18 pm

அயோத்யா: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காகத் திட்டமிடப்பட்டிருந்த பூமி பூஜை திடீர் என்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் சர்ச்சைக்குள்பட்டிருந்த 2.77 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக "ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை' அமைக்கப்பட்டது. அறக்கட்டளையின் தலைவராக மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் நியமிக்கப்பட்டார். சம்பத் ராய் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அயோத்தியில் தற்போதுள்ள ராமர் கோயில் பகுதியில் கடந்த மாதம் 11-ஆம் தேதியிலிருந்து நிலத்தைச் சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் பூமி பூஜையுடன் ஜூலை 2-ஆம் தேதி துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காகத் திட்டமிடப்பட்டிருந்த பூமி பூஜை திடீர் என்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அறக்கட்டளையின் செயலாளரான சம்பத் ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டின் பாதுகாப்பே மற்ற எல்லா விஷயங்களை விடவும் முக்கியமானதாகும். எனவே இந்தியா மற்றும் சீனா இடையே எல்லைப்பகுதியில் நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காகத் திட்டமிடப்பட்டிருந்த பூமி பூஜை ஒத்திவைக்கப்படுகிறது. மற்ற விஷயங்களையும் கணக்கில் கொண்டு ஆராய்ந்த பிறகு புதிய தேதி அறிவிக்கப்படும். எல்லையில் உயிரிழந்த நமது வீரர்களுக்கு எங்களது அஞ்சலியை செலுத்துகிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தேர்விகப்பட்டுள்ளது.

அதேநேரம் கட்டுமானப் பணிகள் தொடர்பாக முழுமையாக அறிந்து கொள்ள எதுவாக வியாழனன்று அறக்கட்டளைக்கான இணையதளம் ஒன்றும் துவக்கி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.