பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வதைக் கண்காணிக்க கர்நாடகாவில் பொதுமக்கள் குழு!

கரோனா தொற்றுகாலத்தில் மக்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வதைக் கண்காணிக்க, கர்நாடகாவில் பொதுமக்கள் கண்காணிப்புக் குழு உருவாக்கப்பட இருக்கிறது.

News image

கோப்புப்படம்

Updated On :18 ஜூன் 2020, 11:05 am

பெங்களூரு: கரோனா தொற்றுகாலத்தில் மக்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வதைக் கண்காணிக்க, கர்நாடகாவில் பொதுமக்கள் கண்காணிப்புக் குழு உருவாக்கப்பட இருக்கிறது.

இதுதொடர்பாக அரசு உயர் அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறியதாவது:

கரோனா தொற்றுகாலத்தில் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் நடைமுறையைக் கண்காணிக்க, தன்னார்வலர்களைக் கொண்ட பொதுமக்கள் கண்காணிப்புக் குழு உருவாக்கப்பட இருக்கிறது.

வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் நடைமுறையை செயல்படுத்த கர்நாடக மாநில அரசினால் உருவாக்கப்பட்ட மாநில அளவிலான செயல்திட்டக் குழு, இந்த முயற்சியை முன்னெடுக்கிறது. இதன்மூலம் தனிமைப்படுத்தும் நடைமுறையானது வாக்குச்சாவடி அளவில் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

அதன்படி வாக்குச்சாவடி மட்ட அலுவலர் ஒருவர் குறிப்பிட்ட வாக்குச்சாவடியின் கீழ் வரும் 300 முதல் 500 வீடுகளை கண்காணிப்பார். இவருக்கு கீழ் செயல்படும் பொதுமக்கள் கண்காணிப்புக் குழு உறுப்பினர் ஒருவரது கண்காணிப்பின் கீழ் 50 முதல் 100 வீடுகள் வரை இருக்கும்.

அந்த உறுப்பினர் குறிப்பிட்ட வீடுகளில் தனிமைப்படுத்துதல் நடைமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பார். அத்துடன் தனது கண்காணிப்பிற்கு கீழ் வரும் வீடுகளுக்கு புதிதாக யாரேனும் வருகிறார்களா என்பதைக் கண்காணித்து, ஏதேனும் சிக்கல்கள் என்றால் வாக்குச்சாவடி மட்ட அலுவலருக்கு தகவல் கொடுப்பார்.

ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் யாராக இருந்தாலும் பொதுமக்கள் கண்காணிப்புக் குழு உறுப்பினர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தங்களது தகவல்களை அதற்கென உள்ள இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.