பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சர்ச்சையை ஏற்படுத்திய பெங்களூரு காவல் ஆய்வாளரின் ‘ஜெய் ஹிந்த்’ சுற்றறிக்கை!

காவல்துறை வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய பெங்களூரு காவல் ஆய்வாளர் ஒருவரின் ‘ஜெய் ஹிந்த்’ சுற்றறிக்கை விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

News image

கோப்புப்படம்

Updated On :15 ஜூன் 2020, 1:29 pm

பெங்களூரு: காவல்துறை வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய பெங்களூரு காவல் ஆய்வாளர் ஒருவரின் ‘ஜெய் ஹிந்த்’ சுற்றறிக்கை விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பெங்களூரு நகர காவல் ஆய்வாளர் ஒருவர் தனது காவல் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கீழ்மட்ட காவலர்கள் இனி தங்களது உயர் அதிகாரிகளுக்கு வணக்கம் சொல்லிவிட்டு ‘ஜெய் ஹிந்த்’ என்று கூற வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதுபோல காவலர் நடத்தை விதிமுறைகளில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதால், அவரது இந்த சுற்றறிக்கை முதலில் காவல்துறை வட்டாரத்தில் பரவி, பிறகு வெளியிலும் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சர்ச்சையை ஏற்படுத்திய பெங்களூரு காவல் ஆய்வாளரின் ‘ஜெய் ஹிந்த்’ சுற்றறிக்கை விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், நாங்கள் அவரிடம் இதுபோல் எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம் என்று தெரிவித்துள்ளோம். அவர் தன்னிச்சையாக இவ்வாறு செயல்பட்டுள்ளார். நாட்டின் சில பகுதிகளில் உள்ள காவல்துறைகள் மற்றும் ஒரு சில துணை ராணுவ பிரிவுகளில் பின்பற்றப்படும் நடைமுறையை ஒட்டி அவர் இவ்வாறு செயல்பட்டுள்ளார்.அவர் எந்த ஒரு துறைரீதியிலான விதிமுறையையும் மீறவில்லை என்றாலும், தேவை இல்லாத சர்ச்சையை தனது நடவடிக்கையால் உருவாக்கி விட்டார்’ என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.