நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

18 நாள்கள் வென்டிலேட்டரில்... கரோனாவை வென்ற 4 மாதக் குழந்தை

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த நான்கு மாதக் குழந்தைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அதன் உடல்நிலை மோசமடைந்தது.

News image
Updated On :13 ஜூன் 2020, 5:44 am


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த நான்கு மாதக் குழந்தைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அதன் உடல்நிலை மோசமடைந்து, 18 நாள்கள் வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை பெற்று, தற்போது கரோனாவில் இருந்து மீண்டுள்ளது.

விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் வினய் சந்த் இது பற்றி கூறுகையில், குழந்தையின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை பூரண குணம் அடைந்து விட்டதாகக் கூறி வெள்ளிக்கிழமை மாலை குழந்தை விசாகா மருத்துவ அறிவியல் மைய மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாகக் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், கிழக்குக் கோதாவரி பகுதியைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் லஷ்மிக்கு கரோனா பாதிப்பு கடந்த மே மாதத்தில் உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவரது 4 மாதக் குழந்தைக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

உடனடியாக குழந்தை மே 25ம் தேதி விசாகப்பட்டினம் விஐஎம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு அதன் உடல்நிலை மோசமடைந்த போது, 18 நாள்கள் குழந்தைக்கு வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து குழந்தைக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, அதில் குழந்தைக்கு கரோனா இல்லை என்பது உறதி செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதன் மூலம் அங்கு கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 252 ஆக உயர்ந்தது. இதுவரை ஒருவர் பலியாகியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.