மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

இந்தியாவில் கரோனா சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை: ஐ.சி.எம்.ஆர்

இந்தியாவில் கரோனா சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது

News image

டாக்டர் பலராம் பார்கவா

Updated On :11 ஜூன் 2020, 1:45 pm

புது தில்லி: இந்தியாவில் கரோனா சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐ.சி.எம்.ஆரின் செயல் இயக்குநரான டாக்டர் பலராம் பார்கவா தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:

இத்தனைப் பெரிய நாடான இந்தியாவில் கரோனா பரவல் வீதம் வெகு குறைவாகவே உள்ளது. நாங்கள் பார்த்த வரையில் சிறு மாவட்டங்களில்  பரவல் வீதம் ஒரு சதவீதத்திற்கு குறைவாகவும், நகரப் பகுதிகளில் ஒரு சதவீதத்திற்கு சற்று கூடுதலாகவும் காணப்படுகிறது. தடுப்பு பகுதிகளில் இது சற்றுக் கூடுதலாக  இருக்கலாம்.  

இந்தியா தொடர்ந்து கரோனா பரிசோதனை, தொடர்புகளைக் கண்டறிதல், பின்தொடர்தல், தனிமைப்படுத்துதல் என்ற வழிமுறையை பின்பற்ற வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நாம் எச்சரிக்கை உணர்வினைக் குறைத்துக் கொள்ளக் கூடாது.

தற்போது நாம் ஒரு நாளைக்கு 1.5 லட்சம் சோதனைகளை செய்து வருகிறோம். இதனை விரைவில் 2 லட்சமாக அதிகரிக்க இயலும். 50 லட்சம் என்ற சோதனை இலக்கை சமீபத்தில்தான் அடைந்திருக்கிறோம்.

மாநில அரசுகள் கரோனா பரிசோதனைக்கு அரசு மற்றும் தனியார் சோதனை மையங்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.