தில்லியில் உள்ள கான் சந்தையின் லோக் நாயக் பவனில் அமைந்துள்ள அமலாக்க இயக்குநகரத்தின் தலைமையகத்தில் ஐந்து ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்டிடம் முழுவதும் நேற்று சைனிடைசர் திரவம் கொண்டு சுத்தப்பட்டுத்தப்பட்ட நிலையில், நாளை வரை சீல் வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 5 ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
தில்லியில் இதுவரை 26,334 பேர் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,887 தொற்று பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை சனிக்கிழமையன்று 2,36,657ஐ எட்டியுள்ளது. இத்தாலியை விஞ்சியுள்ளது இந்தியா. உலக அளவில் கரோனா பாதிப்பில் 6-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் துர்கா ஸ்டாலின் படகு சவாரி!

வரப்பெற்றோம் (27-04-2026)
வெங்காயம் சூட்டைத் தணிக்குமா? சொல்கிறார் பாஜக அமைச்சர்

மே 15-ல் வெளியாகிறது இயக்குநர் சற்குணத்தின் புதிய இணையத் தொடர்!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


