பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பாகிஸ்தானில் விமானப் பயணிகளுக்கு 2 நாள் தனிமைப்படுத்தும் நிபந்தனை தளர்வு

பாகிஸ்தானில் விமானப் பயணிகளுக்கு 48 மணி நேர தனிமைப்படுத்தும் நிபந்தனையை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2020, 8:07 am

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் விமானப் பயணிகளுக்கு 48 மணி நேர தனிமைப்படுத்தும் நிபந்தனையை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது.

கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், 5-ம் கட்ட ஊரடங்கில் பெரும்பாலான நாடுகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விமானப் பயணிகளின் பயணக் கட்டுப்பாடுகள் சிலவற்றையும் தளர்த்தியுள்ளது.

இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் சிறப்பு விமானத்தில் வரும் பயணிகள் அனைவரும் குறைந்தது 48 மணி நேரம் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்க வைத்து வந்தனர். இந்த நிபந்தனையைப் பாகிஸ்தான் அரசு தற்போது தளர்த்தியுள்ளது. அதற்குப் பதிலாக விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்று விமான வட்டாரங்கள் தெரிவித்தன.  

கரோனா வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களின் திறன் குறைந்து வருகின்றது. எனவே இந்த முடிவை அரசு மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. 

பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதே நேரத்தில் தேசிய சுகாதார நிறுவனம் (என்ஐஎச்) மற்றும் விமான நிலையங்களில் உள்ள மாகாண சுகாதாரத் துறையால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்வார்கள். 

மருத்துவ பரிசோதனை மற்றும் கரோனா வைரஸ் பரிசோதனைக்கு பின்னர், பயணிகள் எந்தவொரு அறிகுறிகளையும் இல்லையெனில், தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

கடந்த புதன்கிழமை பிஐஏ சிறப்பு விமானத்தில், அமெரிக்காவிலிருந்து வந்த 281 பயணிகள் மற்றும் சவுதி அரேபியாவிலிருந்து வந்த 253 பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.