மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

உயிருக்குப் போராடியவருக்கு காணொலி வழியாக சிகிச்சை அளித்து உயிரைக் காத்த தில்லி மருத்துவர்

கல்லீரல் செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட நபரின் உடல்நலன் மோசமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், தில்லி மருத்துவர், காணொலி காட்சி வாயிலாக சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

News image

உயிருக்குப் போராடியவருக்கு காணொலி வழியாக சிகிச்சை அளித்து உயிரைக் காத்த தில்லி மருத்துவர்

Updated On :30 ஜூலை 2020, 12:37 pm


புது தில்லி: கல்லீரல் செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட நபரின் உடல்நலன் மோசமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், தில்லி மருத்துவர், காணொலி காட்சி வாயிலாக சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

சர் கங்கா ராம் மருத்துவமனைக்கு மருந்தாளுநர் ஒருவர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, தனது நண்பர் கல்லீரல் செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டு உடல்நிலை கடுமையாக மோசமடைந்திருப்பதாகவும், மூச்சு விட சிரமப்படுவதாகவும் கூறியுள்ளார்.

உடனடியாக அவருக்கு மருத்துவர் உஷத் திர், உதவ முன் வந்தார். கணொலி வாயிலாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், நோயாளி இருந்த இடத்தில் செல்லிடப்பேசி சிக்னல் கிடைக்காததால், நோயாளியை ஒரு சிறிய படகில் ஏற்றினர். படகில் இருந்தபடி, காணொலி காட்சி வாயிலாக மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார். நல்ல வேளையாக, மருந்தாளுநர், மருத்துவர் கொடுத்த மருந்துகளை நன்கு புரிந்து கொண்டு, ஊசி செலுத்தவும் தெரிந்திருந்ததால், உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

உடனடியாக அவரது உடல்நிலை சீரடைந்ததும், ஒரு ஆண்டுக்கு அவரது உடலை சீராக வைத்திருக்க உதவும் மருத்துவ உபகரணங்களயும் சர் கங்கா ராம் மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளது.

தற்போது பொதுமுடக்கம் தளர்வு அறிவிக்கப்பட்டதும், மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பணம் செலுத்தி போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, நோயாளியை தில்லி அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர் திர் கூறியுள்ளார்.

நோயாளியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், மருத்துவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவரது நண்பர் ரெஹ்மான் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.