காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

மகாராஷ்டிரத்திலும் கரோனா பரிசோதனை 20 லட்சத்தை எட்டியது

நாட்டில் தமிழகம், உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிரத்திலும் கரோனா பரிசோதனை 20 லட்சத்தை எட்டியுள்ளது.

News image
மகாராஷ்டிரத்திலும் கரோனா பரிசோதனை 20 லட்சத்தை எட்டியது
Updated On :27 ஜனவரி 2024, 5:01 pm

IANS


நாட்டில் தமிழகம், உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிரத்திலும் கரோனா பரிசோதனை 20 லட்சத்தை எட்டியுள்ளது.

மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிகக் கரோனா பாதிப்பைக் கொண்டிருக்கும் மகாராஷ்டிரத்தில் 10,21,063 அரசு பரிசோதனைக் கூடங்கள் மற்றும் 10,00,374 தனியார் பரிசோதனைகள் கூடங்கள் மூலம் இதுவரை 20,21,437 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இதில் 4,07,877 பரிசோதனை முடிவுகள் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மொத்த பரிசோதனையில் 20.18% ஆகும்.

மாநிலத்தில் மொத்தமாக 3,91,440 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 1,44,694 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 14 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர். 2.32 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.