/

பாட்னா மகளிர் கல்லூரியில் புர்கா அணியத் தடை

பாட்னாவில் உள்ள ஜே.டி. மகளிர் கல்லூரியில் 'புர்கா' அணிவது தடை செய்யப்பட்டுள்ளது.  கல்லூரி நிர்வாகத்தினரால் பரிந்துரைக்கப்பட்ட ஆடைக் குறியீட்டினைப் பின்பற்றுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :27 ஜனவரி 2024, 3:36 pm

ANI

பாட்னாவில் உள்ள ஜே.டி. மகளிர் கல்லூரியில் 'புர்கா' அணிவது தடை செய்யப்பட்டுள்ளது.  கல்லூரி நிர்வாகத்தினரால் பரிந்துரைக்கப்பட்ட ஆடைக் குறியீட்டினைப் பின்பற்றுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

"அனைத்து மாணவர்களும் சனிக்கிழமை தவிர ஒவ்வொரு நாளும் பரிந்துரைக்கப்பட்ட ஆடைக் குறியீட்டில் (ட்ரெஸ் கோட்) கல்லூரிக்கு வர வேண்டும் என்றும் மாணவிகள் கல்லூரியில் 'புர்கா' அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது", என்கிறது கல்லூரியின் முதல்வரும், ப்ரொக்டரும் கையெழுத்திட்ட அறிவிப்பு.

இந்த விதிமுறைகளை மீறினால் ரூ. 250 /- அபராதம் விதிக்கப்படும் என்றது கல்லூரி நிர்வாகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.