அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

ரயில், எரிவாயு உருளையைத் தொடர்ந்து அடுத்த விலையேற்றம் தயார்! 

ரயில் கட்டண உயர்வு மற்றும் எரிவாயு உருளையின் விலை உயர்வு ஆகியவை புத்தாண்டிலேயே மக்களைத் தாக்கிய நிலையில், அடுத்த விலையேற்றத்தை அறிவிக்க உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:19 pm

எக்ஸ்பிரஸ் செய்தி சேவை


புது தில்லி: ரயில் கட்டண உயர்வு மற்றும் எரிவாயு உருளையின் விலை உயர்வு ஆகியவை புத்தாண்டிலேயே மக்களைத் தாக்கிய நிலையில், அடுத்த விலையேற்றத்தை அறிவிக்க உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.

பணவீக்கம் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, கச்சாப் பொருட்களின் விலையேற்றம், நுகர்வு குறைவு போன்ற காரணங்களால் தங்களது உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அதுவும் இந்த ஜனவரி மாதத்திலேயே இந்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் கருதப்படுகிறது.

நெஸ்ட்லே, ஐடிசி, பிரிட்டானியா போன்ற உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், செலவு அதிகரித்து, லாபம் குறைந்ததால், தவிர்க்க முடியாத நிலையில், தங்களது உற்பத்திப் பொருட்களின் விலையை உயர்த்துவது என்று முடிவெடுத்துள்ளன.

பால் மற்றும் எண்ணெய், கோதுமை, சர்க்கரை ஆகியவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்திருப்பதால், ஒன்று விலையை உயர்த்துவது அல்லது பேக்கின் அளவைக் குறைப்பது என்று ஏதேனும் ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலையில் உணவு தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. 

பொதுவாகவே விலையேற்றத்தை பெரும்பாலும் நாங்கள் அமல்படுத்துவதில்லை. ஆனால், தவிர்க்க முடியாத நிலையில், அதனை நாங்கள் செயல்படுத்தியே  ஆக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று நெஸ்ட்லே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 7-12 சதவீத விலை உயர்வை அறிவிப்பது குறித்து ரொட்டித் தயாரிப்பு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.