புணேவில் 11 வயது சிறுவனை அடித்துத் துன்புறுத்திய ஆசிரியர் கைது
புணேவில் 11 வயது சிறுவனை அடித்துத் துன்புறுத்திய ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.


புணேவில் 11 வயது சிறுவனை அடித்துத் துன்புறுத்திய ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தனியார் ஆன்மிக நிறுவனம் ஒன்றில் படித்துவந்த சிறுவன் நேற்று வழக்கம்போல் ஆன்மிக வகுப்பிற்கு சென்றுள்ளான். ஹரிபாட் நாம சங்கீர்த்தனங்களை சரியாகப் படிக்காததால் ஆசிரியர் பிரம்பால் சிறுவனை சரமாரியாக அடித்துத் துன்புறுத்தியுள்ளார்.
இதில், பலத்த காயமடைந்த சிறுவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக போலீஸார் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிறுவனை அடித்து துன்புறுத்திய காரணத்தால் அப்பகுதியில் உள்ள போலீஸார் ஆசிரியரைக் கைது செய்து, இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி (ஐபிசி) பிரிவு 307 கொலை முயற்சியின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து போலீஸார் மேலும் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...