கடுமையான போக்குவரத்து நெரிசல் குறித்து புகார் செய்ய ஒருவர் காவல் நிலையம் சென்ற போது, உடனடியாக இரண்டு மணி நேரம் போக்குவரத்தை நிர்வகிக்கும்படி கேட்கக் கொள்ளப்பட்டார்.
உத்திர பிரதேசத்திலுள்ள பெரோசாபாத்தில் உள்ள சுபாஷ் சந்திப்பில் சோனு சவுகான் என்ற நபர் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதாகத் தெரிகிறது.
பதற்றமடைந்த நபர் நேராக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு (எஸ்.பி) சென்று நிலைமை குறித்து புகார் அளித்தார்.
அதற்கு பதிலாக எஸ்.பி. சச்சீந்திர படேல், இரண்டு மணி நேரம் போக்குவரத்தை நிர்வகிக்க சோனுவிடம் கேட்டு, அவரை வட்ட அலுவலர் பதவியில் 'போக்குவரத்து தன்னார்வலராக' நியமித்தார்.
சோனு ஒரு போக்குவரத்து பாதுகாப்பு உடுப்பு மற்றும் ஹெல்மெட் அணிந்து, ஒரு போலீஸ் எஸ்யூவியில் அமர்ந்தார், மேலும் பல போலீஸ்காரர்களும் அவருடன் வந்து, சந்திப்பில் போக்குவரத்தை நிர்வகிக்கச் சென்றனர்.
சோனுவுடன் வந்த ஃபெரோசாபாத் போக்குவரத்து ஆய்வாளர் ராம்துத் சர்மா, "எட்டு வாகனங்களுக்கு சலான்கள் வழங்கப்பட்டன, தவறான வாகன நிறுத்தம் மற்றும் சாலையின் தவறான பக்கத்தில் வாகனம் ஓட்டியதற்காக அபராதமாக மொத்தம் ரூ.1,600 ரொக்கம் வசூலிக்கப்பட்டது. மீதமுள்ள அபராதத் தொகை சாலை விதிகளை மீறியவர்களால், போக்குவரத்து அலுவலகத்தில் செலுத்தப்படும்.
இந்தச் சோதனையைத் தொடர்வோம், போக்குவரத்து நிலைமையை மேம்படுத்துவதில் சிறந்த சமூக பங்களிப்பை உறுதி செய்வோம். நாங்கள் இரண்டு மணி நேரம் சோனுவின் கட்டளைகளைப் பின்பற்றி, போக்குவரத்து ஓட்டத்தை திறம்பட ஒழுங்குபடுத்தி, சாலையை சீர் செய்ய முடிந்தது. " என்றார்.
இது குறித்து சோனு கூறுகையில், "இந்தச் சோதனை எனக்கு போக்குவரத்து கான்ஸ்டபிள்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு வாகனம் தவறான திருப்பத்தை எடுத்தால், ஒட்டுமொத்த ட்ராபிக்கும் பாதிக்கப்படும். இந்தச் பரிசோதனை முயற்சிக்குப் பிறகு நான் பொறுப்பான குடிமகனாக மாறிவிட்டேன். நீங்களும் மாறுங்கள்’’ என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே 4 வாக்கு எண்ணிக்கை எப்போது தொடங்கும்? வழிமுறைகள் என்னென்ன?

மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது!

பானி பூரி சாப்பிட்ட 6 வயது குழந்தை பலி! 43 பேருக்கு உடல்நலம் பாதிப்பு!

ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரர்; மிகப் பெரிய சாதனையை நோக்கி விராட் கோலி!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


