மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

தில்லிக்கு பதிலாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜெய்ப்பூரில் தரையிறங்குகிறாரா?

வானிலை மோசமாக இருந்தால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், புது தில்லிக்கு பதிலாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தரையிறங்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :19 பிப்ரவரி 2020, 9:10 am


ஜெய்ப்பூர்: வானிலை மோசமாக இருந்தால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், புது தில்லிக்கு பதிலாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தரையிறங்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புது தில்லி சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை அழைத்துக் கொண்டு வரும் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம், வானிலை மோசமாக இருந்தால் புது தில்லிக்கு பதிலாக ஜெய்ப்பூரில் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த மாற்று ஏற்பாட்டை முன்னிட்டு, ஜெய்ப்பூர் விமான நிலையத்தின் கட்டமைப்பு மற்றும் இதர வசதிகள் குறித்து ஆய்வு செய்ய இந்தியாவுக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் மூன்று பேர் திங்கட்கிழமை விமான நிலையத்தை ஆய்வு செய்த நிலையில், மற்றொரு குழு நேற்றும் ஆய்வு செய்துள்ளது.

ஒரு வேளை, அதிபர் வரும் போது, புது தில்லியில் வானிலை மோசமாக இருந்தால், விமானத்தை ஜெய்ப்பூரில் தரையிறக்க தூதரகக் குழுவும் ஒப்புதல் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.