மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ஆப்கானிஸ்தானில் தலிபான் தாக்குதலில் நீதிபதி சுட்டுக் கொலை 

ஆப்கானிஸ்தானில் மேற்கு ஹெராத் மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய..

News image
Updated On :18 பிப்ரவரி 2020, 6:51 am

காபூல்: ஆப்கானிஸ்தானில் மேற்கு ஹெராத் மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் முதன்மை நீதிமன்ற நீதிபதி உயிரிழந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

ஷைடே பகுதியில் உள்ள இன்ஜில் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு தலிபான் தீவிரவாதிகள் குழு நடத்திய தாக்குதலில் நீதிபதி அப்துல் ரஹீம் அஜீமியை சுட்டுக் கொன்றதாக ஜெய்லானி ஃபர்ஹாத் மாகாண அரசாங்க செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். 

நீதிபதி அஜீமி இன்ஜில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தின் தலைவராக பணியாற்றி வந்தவர். தலிபான் பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்கப்பட்டதில் இவர் நேற்றிரவு உயிரிழந்தார். 

மேலும், தெற்கு காந்தஹார் மாகாணத்தின் தான்ட் மாவட்டத்தில் கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு போலீஸார் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் சுதந்திர மனித உரிமைகள் ஆணையம் (ஏ.ஐ.எச்.ஆர்.சி) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2019-ல் தலிபான் பயங்கரவாதிகள் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களில் 2,800 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 7,950 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.