மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

என்கவுண்டரில் இரண்டு குற்றவாளிகள் பலி

பதர்பூர் அருகே பிரஹலத்பூரில் தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவுடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் கொல்லப்பட்டனர். 

News image

கோப்புப் படம்

Updated On :17 பிப்ரவரி 2020, 6:18 am

இன்று (திங்கள்கிழமை) அதிகாலை பதர்பூர் அருகே பிரஹலத்பூரில் தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவுடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் ரபீக் என்ற ராஜா பெஹல்வான் மற்றும் ரமேஷ் பகதூர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தில்லி காவல்துறையின் உயர் அதிகாரி இது குறித்துக் கூறியது, "குற்றவாளிகள் இருவரும் எங்களை நோக்கி பல முறைச் சுட்டனர். நாங்கள் உயிர் காக்கும் புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகள் அணிந்திருந்ததால், பாதுகாப்பாக வெளியே வந்தோம்."

தகவல்களின்படி, திங்கள்கிழமை அதிகாலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. குற்றவாளிகளைச் சரண் அடையுமாறு காவல்துறை கேட்டுக் கொண்டது. ஆனால் அவர்கள் தப்பிக்க முயன்றனர், அது நடக்காதபோது, ​​அவர்கள் காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். காவல்துறையினரின் பதிலடி நடவடிக்கையில், குற்றவாளிகள் இருவரும் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இறந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

கொல்லப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான ரபீக் என்ற ராஜா காசியாபாத்தில் உள்ள லோனி பகுதியில் வசிப்பவர். ரமேஷ் பகதூர் தில்லியில் உள்ள கரவால் நகரில் உள்ள சிவ் விஹாரில் வசிப்பவர்.

காசியாபாத் மற்றும் தில்லியில் கொலை உள்ளிட்ட பல குற்ற வழக்குகளில் இந்த இரண்டு குற்றவாளிகளும் பிடிபட்டனர். காசியாபாத்தின் லோனி பகுதியில் அவர்கள் பயங்கரவாதிகள் என்று போலீஸாரால் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

தில்லி காவல்துறை வட்டாரங்களின்படி, கடந்த வாரம் (பிப்ரவரி 12) ராஜா பெஹல்வன் மற்றும் ரமேஷ் பகதூர் இரண்டு போலீஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.