மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

வேலை கிடைக்காத விரக்தியில் இளம்பெண் தற்கொலை

லாவி யாதவ் (24), என்பவர் வேலை கிடைக்காத விரக்தியில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

News image

கோப்புப் படம்

Updated On :17 பிப்ரவரி 2020, 7:18 am

லாவி யாதவ் (24), என்பவர் வேலை கிடைக்காத விரக்தியில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இவர் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர் ஆவார். 

ஞாயிற்றுக்கிழமை அன்று தனது வீட்டில் துப்பட்டாவால் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளிக்கிழமை முதல் வீட்டினருடன் லாவி யாதவ் பேசவில்லை என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். அவரது மொபைல் அணைக்கப்பட்ட நிலையில் இரண்டு நாட்களாக இருந்துள்ளது.

தற்போது அவரது மொபைல் மீட்கப்பட்டது, ஆனால் தற்கொலைக் குறிப்பு எதுவும் போலீஸாரால் கண்டுபிடிக்கப்படவில்லை.

பிஹாரிபூர் சிவில் லைன்ஸில் வசிப்பவர் லாவி யாதவ் ஆர்.பி. டிகிரி கல்லூரியில் உடற்கல்வியில் இளங்கலை படித்துள்ளார். தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் வீரரான அவர் பரேலியில் வசித்து வந்தார்.

அவரது குடும்பம் லாவி யாதவின் சொந்த கிராமத்தில் வசித்து வந்தது. தொடர்ந்து தொலைபேசி அழைப்புகளுக்கு அவர் பதிலளிக்காத நிலையில்,  பதற்றமடைந்த அவருடைய தந்தையும், சகோதரனும் அவரை நேரில் சந்திக்க கிளம்பி வந்தனர். வீட்டுக் கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.

அவரது தந்தை ஷிஷுபால் உடனே போலீஸாருக்குத் தகவல் அளித்தார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்தபோது, ​​லாவி யாதவ் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று இன்ஸ்பெக்டர் கீதேஷ் கபில் தெரிவித்தார்.

லாவி யாதவ் தனக்கு வேலை கிடைக்காததால் வருத்தமடைந்துள்ளதாகவும், அவரது தனித் திறனும் அவருக்கு எவ்வித பயனும் தரவில்லை என்றும் அவரது தந்தை ஷிஷுபால் போலீஸாரிடம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.