புஜ்: குஜராத் மாநிலத்தில் கல்லூரி விடுதி ஒன்றில் கண்ணியமற்ற முறையில் பெண்களுக்கு நடத்தப்பட்ட மாதவிடாய் சோதனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் புஜ் மாவட்டத்தில் ஸ்ரீ சஹஜானந்த் பெண்கள் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள விடுதியில் கல்லூரியில் பயிலும் பெண்கள் தங்கியிருக்கின்றனர். அந்த விடுதியில் சமீபத்தில் பெண்கள் யார் மாதவிடாய் காலத்தில் இருக்கிறார்கள் என்பது குறித்து எழுந்த விவகாரம் ஒன்றில், அங்கு தங்கியிருக்கும் 68 பெண்களுக்கும் அவர்களது உள்ளாடைகளை நீக்கி சோதனைநடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது புயலைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து இதுதொடர்பாக மாணவியர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாநில மற்றும் தேசிய மகளிர் ஆணையம் சார்பில் கல்லுரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிடம் மாணவி ஒருவர் கூறுகையில், 'நாங்கள் எங்களது கல்வி நிறுவனத்தை மதிக்கிறோம். ஆனால் அவர்கள் நடந்து கண்ட விதம் சரியானதல்ல. அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த விவகாரம் போதிய கவனம் பெற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இதை ஊடக கவனத்திற்கு கொண்டு வந்தோம். கல்லூரி முதலவர் மற்றும் வேறு சிலர் எங்களை மிரட்டினார்கள். அன்று எதுவும் நடைபெறவில்லை என்று எழுதிக் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்' என்று தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதிலளித்த கல்லூரி முதல்வர் தர்ஷனா தோலகியா, 'இந்த சம்பவம் விடுதி தொடர்பானது. கல்லூரியில் எதுவும் நடைபெறவில்லை. அந்த பெண்களின் சம்மதம் இல்லாமல் எதுவும் நடைபெறவில்லை; யாரும் அவர்களைத் தொடவும் இல்லை. நடந்த சம்பவங்கள் குறித்து தீர விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"

ஆர்.பி.எல். வங்கியின் லாபம் மும்மடங்காக உயர்வு!

5 விக்கெட்டுகள் வீழ்த்தி மோஷின் கான் அபாரம்; லக்னௌவுக்கு 156 ரன்கள் இலக்கு!

கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலி: மமதாவுக்கு ராகுல் கண்டனம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


