மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

பஞ்சாபில் கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

பஞ்சாப், மோஹாவில் கடும் மூடுபனி காரணமாக கார் விபத்துக்குள்ளானதில்..

News image
Updated On :11 பிப்ரவரி 2020, 1:17 pm

சண்டிகர்: பஞ்சாப், மோஹாவில் கடும் மூடுபனி காரணமாக கார் விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

பஞ்சாப் மாநிலம் மோஹா-ஹுசைனிவாலா தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களாக அடர்ந்த மூடுபனி நிலவி வருகின்றது. இந்நிலையில், தில்லியிலிருந்து மோஹா நகரத்திற்கு திரும்பிக்கொண்டிருந்த கார் மூடுபனி காரணமாக காட்சித்திறன் குறைவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில், ராஜீவ் மிட்டல் (48), அவரது மனைவி மஞ்சு மிட்டல் (48), மகன் சுபம் மிட்டல் (18) மற்றும் மகள் சுனிதி மிட்டல் (21) என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 

மூடுபனி காரணமாக, இந்த விபத்து நடந்ததாக போலீஸார் கூறியுள்ளனர். டெல்லி உள்பட வட மாநிலங்களில் அடர்த்தியான மூடுபனி நிலவி வருகின்றது. இதனால் சாலைகளில் குறைவான காட்சித் திறன் காரணமாக விபத்துகள் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.