மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

மனைவிக்கு குடும்ப நீதிமன்றத்தில் முத்தலாக் கொடுத்த கணவர்!

தனது மனைவிக்கு மூன்று முறை 'தலாக்' கூறி விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.

News image
Updated On :9 பிப்ரவரி 2020, 6:07 am

முத்தலாக் சட்டத்தைப் பின்பற்ற முடிவு செய்த ஒரு தையல்காரர்,  குடும்ப நீதிமன்றத்தில் தனது மனைவிக்கு மூன்று முறை 'தலாக்' கூறி விவாகரத்து செய்வதாக அறிவித்தார். உத்திரபிரதேசத்தில் நடந்த இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று வழக்கு விசாரணைக்குப் பிறகு குடும்ப நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த மனைவியிடம் அவர் கணவர் மூன்று முறை 'தலாக்' தலாக் தலாக் என்று கூறி, இனி நீ தனது மனைவி இல்லை’ என்று கூறினார்.

கடந்த 15 நாட்களில் உ.பி.யில் நான்காவது முத்தலாக் வழக்கு இது.

எஃப்.ஐ.ஆர் பதிவின்படி, அஃப்ரோஸ் நிஷா (30) என்பவர் பிப்ரவரி 2012-ஆம் ஆண்டில் அப்ரார் அலியை மணந்தார்.

திருமணமான உடனேயே, நிஷா தனது கணவர் மற்றும் மாமியாரால் வரதட்சணைக்காக துன்புறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினார். வேறு வழியின்றி இறுதியாக பிப்ரவரி 2016-இல் வீட்டை விட்டு வெளியேறி, வரதட்சணை துன்புறுத்தல் மற்றும் வீட்டு வன்முறைகளுக்காக மோகன்லல்கஞ்ச் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார்.

குடும்ப நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

வெள்ளிக்கிழமை, அவர்கள் நீதிமன்ற அறையை விட்டு வெளியேறும்போது, ​​அவரது கணவர் தனக்கு  முத்தலாக் கொடுத்தார் என்று நிஷா கூறினார்.

இதற்கிடையில், அப்ரார் அலி, "நான் நீதிமன்றத்திற்குச் சென்றேன், மார்ச் மாதத்தில் ஒரு தேதி கிடைத்துள்ளது. நான் என் மனைவியை நீதிமன்றத்தில் பார்க்கவில்லை. அவர் கூறிய குற்றச்சாட்டுகள் பொய்யானவை" என்றார்.

"முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019-இன் பிரிவுகளின் கீழ் நிஷாவின் புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம், அதன்படி நடவடிக்கை எடுப்போம்" என்று வஜீர்கஞ்ச் எஸ்.எச்.ஓ தீபக் துபே கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.