ஞாயிற்றுக்கிழமை தேசிய தலைநகரில் காற்றின் மாசு அளவு "மிகவும் மோசமான" பிரிவில் இருந்தது. ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு (AQI) '305'-ஆக இருந்தது என்று மையம் நடத்திய காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி அமைப்பு (SAFAR) தெரிவித்துள்ளது. .
இந்த ஆய்வுகளின் மூலம் கிடைத்த தரவுகளின்படி, தில்லி லோதி சாலையில் காற்றின் தரம், நண்பகல் 2.05 மற்றும் இரவு 10 மணிகளில் 203 மற்றும் 214 என்ற நிலையில் காணப்பட்டது. போலவே நொய்டாவிலும் காற்றின் தரம் (319) மோசமாக இருந்ததாகப் பதிவு செய்யப்பட்டது.
சாந்தினி சவுக், மதுரா சாலை ஆகியப் பகுதிகளிலும் காற்றின் தரம் மிக மோசமாக இருந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) தில்லியின் சில பகுதிகளில் காற்று மாசுபாடு காணப்படுகிறது. சுவாசிக்கும் காற்றின் தரத்தை குறிக்கும் எண்ணை மத்திய அரசாங்கத்தின் தர ஆய்வு நிறுவனம் (காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி நிறுவனம்) 0-50 வரை நன்று, 51-100 வரை திருப்தி, 101-200 நடுத்தரம், 201-300 மோசம், 301-400 மிக மோசம், 401-500 அபாயம் என்ற வரையறைகளை நிர்ணயம் செய்துள்ளது.
நகரத்தில் பி.எம் 2.5 மற்றும் பி.எம் 10 போன்ற முக்கிய மாசுபாடுகள் முறையே 305 மற்றும் 180 ஐக் கொண்டுள்ளன.
"மக்கள் அனைவரும் கடின உழைப்பைக் குறைக்க வேண்டும். இதயம் அல்லது நுரையீரல் நோய் உள்ளவர்கள், வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் நீண்ட அல்லது கடின உழைப்பைத் தவிர்க்க வேண்டும்." என்று சஃபர் கூறியுள்ளது.
மேலும் கூறுகையில், சுவாசப் பிரச்னைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருக்கும், மேலும் அனைவருக்கும் ஞாயிற்றுக்கிழமை சுகாதார பாதிப்புகள் ஏற்படக்கூடும்.’’ என்று எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், தில்லி-என்.சி.ஆர் பிராந்தியத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை ஏழு டிகிரி செல்ஷியஸாகத் தொடர்கிறது, அதிகபட்சம் 22 ஆக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவில்லை: நடிகர்கள் சங்கம் அறிவிப்பு

பவர்பிளேவில் 13 ரன்கள்; ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை!

ஈரானுக்கு உதவ ரஷியா தயார்! - விளாதிமீர் புதின்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


