மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

தேர்தல் நாளில் பெண்களுக்கு எதிராக டிவீட் செய்து சிக்கிய முதல்வர் கேஜரிவால்

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நாளில், பெண்களுக்கு எதிராக டிவீட் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.

News image
Updated On :8 பிப்ரவரி 2020, 12:10 pm


புது தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நாளில், பெண்களுக்கு எதிராக டிவீட் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, வாக்களிக்கச் செல்லுங்கள். அனைத்துப் பெண்களுக்கும் எனது சிறப்பான வேண்டுகோள். வீட்டில் எப்படி உங்களது கடமையை ஆற்றுகிறீர்களோ? அதேப்போல, நாட்டிலும், தில்லியிலும் உங்கள் கடமையை ஆற்ற வேண்டும். அனைத்துப் பெண்களும் சென்று வாக்களியுங்கள். வாக்களிக்கச் செல்லும் போது வீட்டில் இருக்கும் ஆண்களையும் அழைத்துச் செல்லுங்கள். அப்போது, யாருக்கு வாக்களித்தால் சிறப்பாக இருக்கும் என்பதை ஆண்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு வாக்களியுங்கள் என்று ஹிந்தியில் டிவீட் செய்துள்ளார்.

இதற்கு மத்திய பெண்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இந்த கருத்து பெண்களுக்கு எதிரான கருத்து என்று தெரிவித்துள்ளார். மேலும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவெடுக்கும் சக்தி கூட பெண்களுக்கு இல்லை என்று கருதுகிறீர்களா என்றும் ஸ்மிருதி இராணி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.