/

கடும் பனிமூட்டம் காரணமாக தில்லியில் 13 ரயில்கள் தாமதம்

தலைநகர் தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான மூடுபனி காரணமாக 13 ரயில்கள் தாமதமாக வந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

News image
Updated On :3 பிப்ரவரி 2020, 6:22 am

புது தில்லி:  தலைநகர் தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான மூடுபனி காரணமாக 13 ரயில்கள் தாமதமாக வந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

வட இந்தியாவின் பல பகுதிகளில் கடுங்குளிர் மற்றும் மூடுபனி நிலை தொடர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக விமானங்கள் மற்றும் ரயில்களின் சேவை தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். 

இந்நிலையில், தில்லியில் இருந்து புறப்பட வேண்டிய 13 ரயில்கள் 4 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டன. அதன்படி, கயா-புது தில்லி மகாபோதி எக்ஸ்பிரஸ் 4 மணி நேரம் தாமதமானது, அதைத் தொடர்ந்து பூரி-புது தில்லி புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் 3 மணி தாமதமாக இயக்கப்பட்டன. 

சிங்க்ராலி-ஹஸ்ரத் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் 2.30 மணி நேரம் தாமதமானது, அமிர்தசரஸ்-நாந்தே சச்கண்ட் எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் 15  நிமிடங்கள் தாமதமானது. 

வாஸ்கோ-ஹஸ்ரத் நிஜாமுதீன் கோவா எக்ஸ்பிரஸ் மற்றும் பாகல்பூர்-ஆனந்த் விஹார் விக்ரம்ஷிலா எக்ஸ்பிரஸ் 1 மணி 30 நிமிடங்கள் தாமதமாகவும், ஹவுரா-புது தில்லி பூர்வா எக்ஸ்பிரஸ் 1 மணி நேரமும் தாமதமாகவும் இயக்கப்பட்டது. 

மேலும், வட இந்தியாவின் பல பகுதிகளில் பனிமூட்டம் காரணமாகத் தில்லியிலிருந்து நேற்று 15 ரயில்கள் தாமதமாக வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.