பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

நான்கு மகள்களுடன் தற்கொலை செய்து கொண்ட தாய்

ஒரு பெண் மற்றும் அவரது நான்கு மகள்கள் உட்பட ஒரு குடும்பத்தின் ஐந்து பேர் இறந்து கிடந்தனர்

News image

கோப்புப் படம்

Updated On :2 பிப்ரவரி 2020, 6:56 am

ஃபதேபூரின் சாந்திபூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டில், ஒரு பெண் மற்றும் அவரது நான்கு மகள்கள் உட்பட ஒரு குடும்பத்தின் ஐந்து பேர் இறந்து கிடந்தனர்.

முதற்கட்ட விசாரணையில், ஐந்து பேரும் விஷம் குடித்ததாக தெரிய வந்துள்ளது என்று கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (ஏஎஸ்பி) ராகேஷ் குமார் தெரிவித்தார்.

"ரம்பரோஸ் என்ற நபரின் வீட்டிலிருந்து விசித்திரமான வாசனை வருவதாக எங்களுக்கு பக்கத்து வீட்டிலிருந்து தகவல் கிடைத்தது. கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்தபோது, ​​அங்கே ஐந்து சடலங்கள் கிடந்ததைக் கண்டோம். வீட்டிலிருந்து விஷம் பாட்டில்களைப் பறிமுதல் செய்துள்ளோம்," என்று குமார் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

"அந்தப் பெண்மணியின் கணவர் தினமும் குடித்துவிட்டு தனது மனைவியுடன் தவறாமல் சண்டையிட்டுக் கொண்டிருந்ததாக அக்கம்பக்கத்தினர் குற்றம் சாட்டினர். இந்தக் காரணத்தினால்தான் மனைவி தனது மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டார்" என்று அவர் மேலும் கூறினார்.

காவல்துறை அதிகாரி மேலும் கூறுகையில், அவர்கள் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், தப்பியோடிய கணவரைப் பிடிக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறினார்.

மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.