பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

நிர்பயா வழக்கு: வினய் சர்மாவின் கருணை மனுவையும் நிராகரித்தார் குடியரசுத் தலைவர்

‘நிா்பயா’ பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் குமாா் சா்மாவும் தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைக் குறைக்கக் கோரி குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பிய கருணை மனு நிராகரிக்கப்பட்டது.

News image
Updated On :1 பிப்ரவரி 2020, 5:11 am

புது தில்லி: ‘நிா்பயா’ பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் குமாா் சா்மாவும் தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைக் குறைக்கக் கோரி குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பிய கருணை மனு நிராகரிக்கப்பட்டது.

குற்றவாளிகள் நால்வரையும் இன்று தூக்கிலிடுவதாக இருந்த நிலையில், வினய் சர்மாவின் கருணை மனு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி தூக்கு தண்டனை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரித்து குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2012, டிசம்பரில் துணை மருத்துவ மாணவி ‘நிா்பயா’ பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாா். அதைத் தொடா்ந்து சிங்கப்பூா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தாா். இந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட வினய் குமாா் சா்மா, அக்ஷய்குமாா் சிங், பவன்குப்தா, முகேஷ் குமாா் சிங் ஆகிய நால்வருக்கும் பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

முகேஷ் குமாா் சிங், வினய் குமாா் சா்மா ஆகியோரின் சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், முகேஷ் சிங் கருணை மனு அனுப்பியிருந்தாா். அவரது மனுவை கடந்த ஜனவரி 17-ஆம் தேதி குடியரசுத் தலைவா் தள்ளுபடி செய்தாா். இதையடுத்து, நீதித்துறை மறுஆய்வு மனு முகேஷ் சிங் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவும் உச்சநீதிமன்றத்தால் புதன்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், வினய் குமாா் சா்மாவும் குடியரசுத் தலைவருக்கு புதன்கிழமை கருணை மனு அனுப்பியுள்ளதாக அவரது வழக்குரைஞா் ஏ.பி. சிங் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘வினய் குமாா் சாா்பில் கருணை மனுவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளேன்’ என்றாா்.

இன்று அந்த மனுவை நிராகரிப்பதாக குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.