மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

பூரி ஜெகந்நாதர் கோயில் டிச.23-ல் திறக்கப்படுகிறது

கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருக்கும் பூரி ஜெகந்நாதர் கோயில் வரும் 23-ம் தேதி திறக்கப்படுகிறது.

News image
பூரி ஜெகந்நாதர் கோயில் டிச.23-ல் திறக்கப்படுகிறது
Updated On :27 ஜனவரி 2024, 6:06 pm

ENS


புவனேஸ்வர்: கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருக்கும் பூரி ஜெகந்நாதர் கோயில் வரும் 23-ம் தேதி திறக்கப்படுகிறது.

இது குறித்து முடிவு செய்ய கோயில் நிர்வாகம் தரப்பில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், 12-ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட பூரி ஜெகந்நாதர் கோயிலை வரும் 23-ம் தேதி திறக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, பூரி ஜெகந்நாதர் கோயிலை டிசம்பர் 23-ம் தேதி திறக்கலாம் என்ற பரிந்துரையை ஒடிசா அரசுக்கு கோயில் நிர்வாகம் அனுப்பி, ஒப்புதல் கிடைத்ததும், கோயிலை திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிகிறது.

அதேவேளையில், கோயில் டிசம்பர் 23-ம் தேதி திறக்கப்பட்டாலும், டிசம்பர் 31 வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என்றும், ஜனவரி 3-ம் தேதி முதல் கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.