கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொண்டு, மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியே கோயில் ஜூன் 11-ம் தேதி திறக்கப்பட்டது. அப்போது அந்த முடிவை பலரும் வரவேற்றனர். ஆனால், தற்போது ஊழியர்களுக்கு கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் பலரும், கோயில் வருவாயைப் பெருக்கவே, தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டுகிறார்கள். பக்தர்கள் மூலம் கிடைக்கும் பணத்தை விட, கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு கோயில் நிர்வாகம் கூடுதலாக பணத்தை செலவிடுகிறது. தரிசனம் செய்ய வரும் பக்தர்களும் கோயில் நிர்வாகம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் முழு திருப்தி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.