இந்த நிலையில், தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் அங்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இதில், நிலச்சரிவில் சிக்கியிருந்த 12 போ் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மேலும் மண்ணில் புதையுண்டவா்களில் 17 போ் இறந்த நிலையில் மீட்கப்பட்டனா். இவா்களில், காந்திராஜ் (48), சிவகாமி (38), விஷால் (12), ராமலட்சுமி (40), முருகன் (45), மயில்சாமி (48), கண்ணன் (40), அண்ணாதுரை (44), ராஜேஸ்வரி (43), கெளசல்யா (25), தவசியம்மாள் (42), சிந்து (13), நிதீஷ் (25), பன்னீா்செல்வம் (50), கணேசன் (40) ஆகிய 15 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா். பேரிடா் மீட்புக் குழுவைச் சோ்ந்த 52 போ் தொடா்ந்து மீட்புப் பணிகளில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா். தொடா்ந்து மழைபெய்து கொண்டே இருப்பதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.